Sunday, April 4, 2010

செய்தி -- நாடாளுமன்ற வளாகத்தில் இனி புதிய சிலைகளுக்கு அனுமதியில்லை!


டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இனி புதிய சிலைகளோ, உருவப்படங்களோ வைக்க அனுமதிக்கப்படாது.

லோக்சபா சபாநாயகர் மீராக் குமார் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தலைவர்களின் சிலைகள் மற்றும் உருவப்படங்கள் தொடர்பான கூட்டம் டெல்லியில் நடந்தது. 

ஏற்கனவே ஏராளமான சிலைகளாலும், உருவப்படங்களாலும் நிரம்பி வழியும் நாடாளுமன்ற வளாகத்தில் மேலும் சிலைகளை வைப்பது வளாகத்தின் அழகை கெடுக்கும் வகையில் அமையும் என குழுவினர் கருத்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தின் அழகை கட்டிக்காக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் அம்சங்களின் அடிப்படையிலும் சிலைகள் வைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க இக்குழு தீர்மானித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


நன்றி: http://thatstamil.oneindia.in/news/2010/04/04/no-more-statues-parliament.html

--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!

அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!

தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!

http://balaphotoblog.blogspot.com/

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment