இடைக்கும் நடுவில்
இடைவெளி என்றாலும்
இடையில் எந்தவித
இடையூறும் இல்லாததால்
தலையை சாய்த்தபடி
அரைக்கண் மூடியபடி
அமைதியாய் ரசித்தபடி
ஆனந்தமாய் நான்
அமைதியாய்ப் பக்கம் வந்து
அரைநொடி சுழற்றி அடித்து
நிலையைச் சாதகமாக்கி விட்டு
நில்லாமல் நகர்ந்தது காற்று
அதிரடியாய் அத்தனையும் விலகி
அங்கங்கே அங்கம் தெரிய
மணிவண்ண தேகத்தில்
பிறைநாபி பளீரென வெளிப்பட
மிஞ்சிய பாகத்தில்
மிச்சமுள்ள மச்சங்கள் மின்னிட
திருடனாய் நான் மட்டும்
திருவிழாவைத் தனியே ரசிக்க
அங்கங்கே அவசரமாய் ஓடி
அகப்படும் அங்கம் மறைத்து
நடப்பது தெரியாமல் இருக்கும்
வானத்தின் மானம் காக்க
துடித்துக் கொண்டிருக்கிறது
தன்னந்தனியாய் அந்த
மேகம்......
.
--
என்றும் அன்புடன் -- துரை --
வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்' : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral --
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment