Tuesday, January 25, 2011

[கனடா தமிழ் Canada Tamil] குழந்தைகள் நெற்றியில் விபூதியாகும் பிரபாகரன் வீட்டு மண்!

முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள்.

ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை... இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர்.

இவர்கள் இருவரையும் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை நான்கு நாட்கள் இலங்கையில் சித்ரவதைக் கொடுமை நடக்கும் தீவிரவாதத் தடுப்புப் புலனாய்வு அமைப்பு இயங்கும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் வைத்து விசாரித்துள்ளார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தமிழ் ஈழ  ஆதரவுத் தலைவர்கள், மத்திய, மாநில  அரசுகள் தலையிட்டதனால் உயிர் பிழைத்த அவர்களிடம் "இந்தப் பயணம் ஏன்?' என கேட்டோம்.

""எனக்கு நினைவு தெரிந்து 95-ம் ஆண்டு தொடங்கி  ஈழப் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரை பார்த்ததும்,  தமிழ்ப் பெண்ணான எனக்குள் ஒரு இயலாமை மேலோங்கிய குற்ற உணர்ச்சி குடிகொண்டுவிட்டது. தமிழகத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் ஒரு வழக்கறிஞராக நின்று எதிர்த்துப் போராடும் எனக்கு போருக்குப் பிந்தைய ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டாகியது. அந்தப் போரினால் அனாதைகளான பல்லா யிரம் குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க  வேண்டும் என்கிற எனது ஆசையை, எனது குடும்ப நண்பரான திருமலையிடம் தெரிவித்தேன். அவரும் மணந்தால் போரினால் நிர்க்கதியான தமிழ் ஈழ குடும்பத்துப் பெண்ணைத்தான் மணப்பேன் என கடந்த வருடமே பெண் தேடி ஈழப் பகுதிகளுக்குச் சென்று வந்தார். அவரிடம் அங்குள்ள  பல ஈழத் தமிழ்க் குடும்பங்களின் முகவரிகளும் இருந்தன.

பொங்கல் திருநாளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க  எங்களது ஊதியத்திலிருந்து ஒரு சொற்பத் தொகையை அம்மக்களுக்கு ஆறுதலாக  கொடுக்கலாம் என நாங்கள் திட்டமிட்டோம். ஏற்கனவே திருமலைக்கு நன்கு அறிமுகமான இலங்கைத் தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உதவ முன் வந்தார். ஈழத்தின் இன்றைய  சமூகவியல், எதிர்கால அரசியல், போராளிகளின் இன்றைய நிலை... என பல கேள்விகளுக்கும் விடை காணலாம் என 13-ந் தேதி ஜெட் ஏர்வேஸில் பயணமானோம்.

14-ந் தேதி முதல் எம்.பி.யின் சொந்தத் தொகுதி யான வவுனியா மற்றும் மட்டக்களப்பு, கிளி நொச்சி ஆகிய பகுதிகளை 16-ந் தேதி வரை சுற்றி வந்தோம்.  பிறகு  ஓமந்தை  ராணுவ செக்போஸ்ட் முதல் யாழ்ப்பாணம் வரை செல்ல  ராணுவ அமைச்சகத்தின் அனுமதியை எம்.பி. அவர்கள்  பெற்றுத் தந்தார்.

16-ந் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து 3 மணி நேர பேருந்து, ஆட்டோ பயணம் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய நாவாலி, நாவலூர் வழியாக பயணித்தோம்.

வல்வெட்டித்துறை  போனதும் எங்கள் மனசு கொந்தளித்தது. தமிழீழ தலைவர் மேதகு  பிரபாகரன் வீடு இடிந்து சின்னாபின்னமாகக் கிடந்தது. அந்த வீட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிலிருந்த மண்ணை நெற்றியில் விபூதிபோல் குழந்தைகளுக்குப் பூசிக் கொண்டிருந்தார்கள். நேராக தலைவரின் தாயார் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைக்குப் போனோம். அங்கிருந்த தமிழ் நர்ஸிடம் ""அம்மாவைப் பார்க்கணும்'' என்றோம்.  சத்தம் போடாமல் வாருங்கள் என அழைத்துச் சென்றார். பத்து படுக்கைகள் கொண்ட அந்த  வார்டில் உள்ள ஒரு சிறிய படுக்கையில்  ஒரு கொசுவலைக்கு அடியில் அம்மா படுத்திருந்தார்.

கை, கால்கள் இரண்டும் பக்கவாதத்தில் முடங்கிக் கிடந்திருந்தது.  நெற்றியில் ஒரு  ஆபரேஷன் செய்த பிளாஸ்திரி. மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் ட்யூப்கள்  சொருகியிருந் தது. "தினமும் காலையில் ஒரு டம்ளர் கறுப்புத் தேயிலை. மாலையில் கொஞ்சம் சத்தான திரவ உணவு. அதையும் தலைவரின் அக்காள் மகள் ஒருவர் கொண்டு வந்து தருவார்' என சொன்னார் அந்த நர்ஸ்.

நான் அவரது பக்கத்தில் அமர்ந்து முகத்தை கைகளால் ஏந்தி "அம்மா நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கேன் அம்மா' என உரக்கக் கத்தினேன். அம்மா கண் விழித்துப் பார்த்தார். அவர்களது கண்களில் கண்ணீர். "ம்...ம்...ம்...' என  மூன்று முறை  இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு கேவலை வெளிப் படுத்தினார். மாபெரும் புரட்சி வீரனின்  தாயாரது இயலாமை நிறைந்த கேவலை கேட்ட நான்... கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தேன். உடனே நர்ஸ்கள் எங்களை  வெளியேறச் சொன்னார்கள்.

மனதை கல்லாக்கிக்கொண்டு 18-ந் தேதியன்று கொழும்பு நோக்கி திரும்பியபோது ஓமந்தை ராணுவ செக்போஸ்ட்டில் மதியம் 3 மணிக்கு "உங்களை நாங்கள் விசாரிக்க வேண்டும்' என ராணுவ உளவுப் பிரிவு போலீசார் அழைத்துக்கொண்டு போய் ஓமந்தை போலீஸ் நிலையத்தில்  உட்கார வைத்தபோதுதான்... இலங்கை அரசின் மற்றொரு முகம் எங்களுக்குத் தெரிய வந்தது.

நாங்கள் சுற்றிப் பார்த்த பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் இல்லாத இடமே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் அகதிகள் முகாம்களில் தமிழர்கள் தண்ணீர், உணவு, மருந்துகள் இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார்கள். கல்வி என்பது இளைய தலைமுறைக்கு மறுக்கப்பட்டிருந்தது. மேற்கூரைகள் இல்லாத பல வீடுகளில்  கை, கால்களை இழந்த பல தமிழ்க்  குழந்தைகள் அடுத்தவேளை உணவுக்காக யாசித்துக்கொண்டிருந்தார்கள். இதுபோன்ற  குடும்பங் களின்  இளைஞர்களையோ, குடும்பத்தலைவனையோ பார்க்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருந்தார்கள் அல்லது புலிகள் என்ற பெயரில் வேறுசில முகாம்களில் கொடுமைகளுக்குள்ளாகிக் கிடந்தார்கள்.

 நாங்கள் கொழும்பு ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் எங்களது அனைத்து அசைவுகளையும் அவர்கள் கண்காணித்துப் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

ஓமந்தையில் சிறிதுநேர விசாரணைக்குப் பிறகு  2 பேஜேரோ கார்களில்  6 மணி நேர  பயணமாக பாது காப்புடன்  எங்களை கொழும்பு நகரிலுள்ள தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் கட்டிடத்திற்குள் 19-ந் தேதி அழைத்துச் சென்றார்கள். இருவரையும் தனித்தனியாக 4-வது மாடியிலும் ஆறாவது மாடியிலும்  வைத்து விசாரணை  செய்தார்கள். தேசிய பாதுகாப்புப் பிரிவு, தீவிரவாதிகள்  நடவடிக்கையை கண்காணிக்கும் உளவுப்  பிரிவு, சாதாரண  சி.ஐ.டி. பிரிவு மற்றும் ராணுவ போலீஸார் மற்றும் லோக்கல் போலீஸார் என மொத்தம் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த  50 பேர் மணிக்கணக்கில் விசாரித்தனர். நாங்கள் கொண்டு போயிருந்த கேமரா, மொபைல், எங்களது ஈ-மெயில்கள் அனைத்தும் பிரித்துப் பார்க்கப்பட்டது.

அங்கயற்கண்ணி என்ற பெயர் கொண்ட முதல் தற்கொலைப்படைப் பெண்புலி கடலில் தாக்குதல் நடத்திய படகு ஒன்று  கடற்கரையில்  நிறுத்தப்பட்டிருந் தது. அழியாமல் இருந்த அந்த நினைவுச் சின்னத்தின் முன் ஒரு புகைப்படம்  எடுத்துக்கொண்டோம். "அது ஏன்?' எனக் கேட்டார்கள்.

விடுதலைப்புலியாக இருந்த பெண்ணுக்கு  இயக்கத்தில் இருக்கும்போதே திருமணம் நடந்தது. அதற்கு அடையாளமாக  ஒரு புதுவிதமான மாட்டுக் கொம்பு போன்ற ஒரு தாலியை விடுதலைப்புலிகள் பரிசளித்திருந்தார்கள். அதை புகைப்படம் எடுத்திருந்தேன். அது ஏன்  என விளக்கச் சொன்னார்கள்.

திருமலை தனது ஈ-மெயிலில் மாவீரர் தின நாளுக்கான கொண்டாட்டங்களைத் தனது நண்பர் களோடு பகிர்ந்திருந்தார்.  அதைப் பார்த்ததும்  டென்ஷனான  அவர்கள் அவரைத் தாக்க முற்பட்டார்கள்.

தீவிரவாத  புலனாய்வுப் பிரிவின் 4-வது மாடி அறைகளில் நாங்கள் மட்டும் இல்லை. வேறு சில விசாரணைக் கைதிகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் 70 வயது முதியவர்.  பல மாதங்களாக  அங்கேயே கிடக்கும் அவர் செய்த குற்றம்... வெளிநாட்டிலிருந்து அவரது செல்போனுக்கு யாரோ, பிரபாகரன் படத்தை அனுப்பியதுதான்.

"நீங்கள் யார்? என்ன திட்டத்தை நிறைவேற்ற  இங்கு வந்தீர்கள்? ஏன் பிரபாகரனின்  தாயாரை சந்தித்தீர்கள்?' என்கிற கேள்விகளோடு அரசிய லும் பேசினார்கள். "தமிழீழ  அரசியலை ப் பற்றி பேசி வைகோ, ராமதாஸ் எல்லாம் என்ன கிழிச்சாங்க. சீமானால தமிழ்நாட்டுல ஒரு சீட்டாவது ஜெயிக்க முடியுமா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?' என 21-ந் தேதிவரை கேள்வி களால் மிரட்டிக்கொண்டேயிருந்தார்கள்.

நாங்கள் உயிருடன் தமிழகம் வருவோம் என்கிற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. 21-ந் தேதி மதியம் இரண்டரை மணிக்கு எங்களை ஒரு கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுதுதான் எங்களை விடுதலை செய்ய ஒரு பெரிய போராட்டமே நடந்தது என தெரிந்துகொண்டோம்.

விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் ஒரு  நிம்மதி பெருமூச்சு வந்தது.

தமிழீழ போக்குவரத்துக் கழகம்,  தமிழீழ  பாடசாலை, தமிழீழ  குடிநீர் வாரியம் என ஈழப் பகுதிகளில் வாழ்ந்த ஈழ மக்களில் பலர் கடைசி முள்ளிவாய்க்கால் வரை  தலைவர் பிரபாகரனுடன் வீரமுடன் பயணித்திருக் கிறார்கள்.

அந்தப் போரில் காயப்பட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்கு இன்றைய  தேவை தமிழ் ஈழம் அல்ல.  நல்ல சோறும், குடிநீரும்தான். அதைப் பெற்றுத் தர நாம் என்ன செய்யப் போகிறோம்? என்கிற கேள்வியே எனக்குள் எழுந்தது. இலங்கை ராணுவத்தினருக்கு போர் முடிந்த பிறகும் இருக்கும் புலிகள் மீதான பயமும், தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஈழம் மலரும் என்கிற நம்பிக்கையும் ஒரு பெரிய ஆச்சரியத்தை என் மனதில் ஏற்படுத்தியது.

Muthamizh
Chennai

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] அமிதாபுக்கு தந்தி கொடுக்க சீமான் கட்சி முடிவு

கொழும்பு நகரில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மறுத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்து ஜனவரி 27-ம் தேதி தந்தி கொடுக்க சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''கடந்த ஆண்டு கொழும்பு நகரில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கலந்துகொள்ள மறுத்த மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் துணிச்சலான முடிவை தமிழினம் பாராட்டியது.

அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ,  அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் நாளை தந்தி கொடுக்க உள்ளனர்''என்று தெரிவித்துள்ளது.

 
Muthamizh
Chennai

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு! – ஒரு திறந்த மடல்

வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல்  கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது!
 
நீங்கள் கூறிய பல யோசனைகளை சீமான் ஏற்றுக் கொண்டால் அது முதல்வர் கருணாநிதியையும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்குச் சமமாகிவிடும்.

தமிழினப் படுகொலைக்கு காங்கிரஸ்தான்  காரணம் திமுக அல்ல.  அம்மாவை விட அய்யா நல்லவர். அதன் அடிப்படையில் காங்கிரசை எதிர்ப்போம் திமுக வை (மறைமுகமாக) ஆதரிப்போம் என்கிறீர்கள்.  இதைத்தான் சுபவீ காரணம் காட்டுகிறார். அய்யாவை விட அந்த அம்மா மோசமானவர் என்கிறார். அதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்கள்.
 
இது எப்படி இருக்கிறதென்றால் தாடிக்கொரு சீயாக்காய் தலைக்கு ஒரு சீயாக்காய் வைத்துக் கொள்ளலாம் என்பது போல இருக்கிறது

காங்கிரஸ் இந்திய தேசியம் பேசும் கட்சி. அந்தக் கட்சி அப்படித்தான் நடந்து கொள்ளும். ஆனால் திமுக அப்படியல்லவே?
 
எங்களுக்கு அயலார் உதவி செய்யவில்லை என்றால் கோபித்துப் பயனில்லை. ஆனால் உற்றார் உறவினர் உதவிசெய்யவில்லை
என்றால் அவர்கள் மீது கோபம் வரத்தானே செய்யும்?
 
திராவிட தேசியம் பேசிய திமுக உதவி செய்யும் நிலையில் இருந்தும் உதவி செய்யாது விட்டதுதான் பெரிய இரண்டகம். வரலாற்றுத் தவறு. அதற்கு மன்னிப்பே கிடையாது.
 
முள்ளிவாய்க்காலில் குருதி வாடை வீசிக் கொண்டிருக்கும் போது தில்லி சென்று கூடாரம் அடித்து தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகள் பெறுவதற்கு காங்கிரசிடம் கருணாநிதியிடம் வரம் கிடந்தாரே இதைவிடவா செல்வி ஜெயலலிதா மோசமாக நடந்து கொள்வார்?  அமைச்சர் பதவிகள் இல்லை என்றால்  கருணாநிதி சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் துணிந்தார்.

மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தன.  ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கருணாநிதி கோபம் காட்டவில்லை. "மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகிறது" என்றுதானே முகாரி பாடினார்?  தமிழகத்தில் முத்துக்குமாரன் தீக்குளித்த போது அவருக்கு வீட்டுச் சிக்கல். அதனால்தான் தீமூட்டி இறந்தார்" என்று கருணாநிதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்!
 
இறுதி வாய் சொட்டு நீருக்கும் வழியின்றித் தமிழகம் நோக்கி அவலக் குரல் எழுப்பியவாறு அந்த கடற்கரை மண்ணில் வீழ்ந்து மடிந்த போதும் கலைஞர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். தமிழின அழிப்பின் இறுதி நாட்களில் சிங்கள தேசத்தின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் குருதி  சிந்திச் சாய்ந்த வேளையிலும், நெருப்பில் கருகி வீழ்ந்த வேளையிலும் கலைஞர் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருந்தார்.

சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன?  அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி, கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைத்தாலும் வியப்பில்லை!
 
ஈழத் தமிழர்களின் சாபக்கேடு, தமிழகத்தில் ஈரமுள்ள ஒரு தலைவன் அப்போது இருக்கவில்லை. தமிழகத்து முதல்வர் நாற்காலியில் கருணாநிதியைத் தவிர யார் இருந்திருந்தாலும் பாதித் தமிழர்களாவது காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.
 
சென்னை மரீனா கடற்கரையில் காலை உணவை முடித்துக் கொண்ட பின்னர் தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே உண்ணா நோன்பு இருந்து பின் மதிய உணவுக்கு நோன்பை முடித்துக் கொண்ட நடிப்பை அல்லது கோமாளித்தனத்தை வேறுயாராவது மிஞ்ச முடியுமா?  இதை வைத்துத்தான் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் அமைச்சர் கோத்தபாயா "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நல்ல கோமாளிகள்" என்று சொன்னான். அதையிட்டு கருணாநிதி வாய் திறக்கவில்லை. அதன் பொருள் "ஆமாம் நாங்கள் அரசியல் கோமாளிகள்தான்" என்று மறைமுகமாகச் சொன்ன மாதிரி இருந்தது.
 
அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். அப்போதும் கருணாநிதி என்ன சொன்னார்? அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுகிறது என்று சொன்னார்!

'வீழ்வது நாமாக  இருந்தாலும், வாழ்வது தமிழாக  இருக்கவேண்டும்' ' 'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' என்ற பல்லக்குப் பேச்சிற்கு மட்டும் குறைவில்லை. ஆனால் சிங்கள இராணுவம்  தமிழீழ மக்கள்மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் 'மானாட மயிலாட' வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றிய  ஒரே மனிதர்  கருணாநிதிதான்.
 
தொடக்கத்தில் ஜெயலலிதா பிரபாகரனுக்கு ஒன்று நடந்தால் தமிழகம் கிளம்பி எழும் என்று பேசினார். பின் அவரது பாப்பாத்தி உணர்வு திராவிட பேசிய உணர்வை மழுங்கடித்து விட்டது. "அப்போது நான் கட்சிக்குப் புதிது. கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைப் படி அப்படிப் பேசினேன். இப்போது நிலைமை அப்படியில்லை" என்று தனது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பித்தார். அதாவது சோ இராமசாமி, இந்து இராம், அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரது வழிகாட்டல் படி புலி எதிர்ப்பாளனாக மாறினார்.
 
ஜெயலலிதா தமிழீழம்  பற்றி சொல்லியதை பட்டியல் இட்டுள்ளீர்கள். மெத்த நல்லது. அம்மா சொன்னதை பட்டியல் போட்ட நீங்கள் அய்யா சொல்லியதை ஏன் பட்டியல் போடவில்லை? மாமியார் உடைத்தால் மண்குடம்  மருமகள் உடைத்தால் தங்கம் என்பதா?
 
கருணாநிதி தொடக்க முதல் தலைவர் பிரபாகரனை தனது "தமிழினத் தலைவர்" பட்டத்துக்கு ஆபத்தான மனிதர் என்றே பார்த்தார். அதுதான் "அந்தப் பயல் (சொல்லாட்சியைக் கவனியுங்கள்) தன்னை என்ன தமிழினத் தலைவன் என்றா நினைக்கிறான்" என்று கேட்டிருக்கிறார்.
 
தமிழீழ கோரிக்கை பற்றி கருணாநிதி எத்தனை குத்துக்கரணங்கள் அடித்தார் என்பதற்கு பட்டியல் போட்டால் அது எத்தனை பக்கம் நீளும்?

நான் வன்முறையை ஆதரிக்கமாட்டேன். அதாவது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க மாட்டேன்.
இது சகோதர யுத்தம். புலிகள் அதைத்தான் செய்கிறார்கள். அதாவது எனது அன்புக்குரிய  ரெலோ தலைவர் சபாரத்தினத்தை கொன்றவர்கள் புலிகள். ரெலோ தலைவர் றோவின் ஆணைப்படி புலிகளைக் கொல்ல அணியமாகிக் கொண்டிருந்தார்கள்.  அதனை அறிந்த புலிகள் முந்திக் கொண்டார்கள். அதுதான் நடந்தது.
ஈழம் விடுதலை அடைந்தால் அதையிட்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான். அதாவது  பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன். ஆனால் பேரன் பிறந்தால் உச்சி மோந்து கொஞ்சி மகிழ்வேன்!
ஸ்ரீலங்கா அரசு இனச் சிக்கலுக்கு  ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கு கூடிய உரிமைகள் வழங்க  வேண்டும் இல்லையேல்  செக்சிலோவக்கிய குடியரசுகள் அமைதியாகப் பிரிந்து தனிவழி போனதுபோல சிங்களவரும் தமிழரும் பிரிந்து தனிநாடு காண்பதே சரியான வழி என்று சொன்னவரும் கருணாநிதிதான். இதைத்தான் இரட்டை நாக்குடையாய் போற்றி என்று பேரறிஞர் அண்ணர் வருணித்தார்!
ஜெயலலிதா தடா சட்டத்தின் கீழ் வைகோ, நெடுமாறன், சுப.வீ போன்றோரை அடைத்தவர் என நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள்.  உண்மை. அதை யாரும் மறைக்கவில்லை. எட்டிப் பழம் இனிக்கும் என்று யாரும் சொல்லவில்லை.
 
ஆனால் கருணாநிதியின் யோக்கியதை என்ன? எழுபது போராளிகளை ஆண்டுக்கணக்காக சிறப்பு முகாம் என்ற அலங்காரச் சிறைகளில் வைத்து உள்ளாரே? எவர் மீதும் இதுவரை குற்றச்சாட்டும் இல்லை வழக்கும் இல்லை? இதுதான் தமிழினத்தலைவரின் இலக்கணமா?
 
எங்களை விடுங்கள். தமிழக மீனவர்கள் 550 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்களே?  என்ன செய்தார் கருணாநிதி? பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று முழங்கிக் கொண்டு தில்லியோடு சண்டைக்குப் போனாரா? இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த இனத்தவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா?
 
மகாராஷ்ட்ராவில் கார் ஓட்டிப் பிழைக்க வேண்டுமானால் மராத்தியனாகத் தான் இருக்கவேண்டும். மராத்தி  மொழியில் எழுத படிக்கத் தெரிந்தால் தான் வண்டி  ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று இந்தியாவின் தேசிய பாரம்பரிய  கட்சியான காங்கிரஸ் ஆட்சியாளர் போட்ட சட்டம் இயற்றியது. மும்பையில், பல்வேறு மையங்களில் புகைவண்டி வேலைக்கான தேர்வு நடைபெற்ற போது ஏராளமான பீகார் மாநில இளைஞர்கள் கலந்துகொண்டனர். தேர்வு மையங்களுக்குள் அதிரடியாக நுழைந்த மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தொண்டர்கள் வடஇந்திய இளைஞர்களின் விடைத்தாள்களை கிழித்தெறிந்தனர். அவர்கள் தேர்வு மையத்தை விட்டு ஓட ஓட விரட்டப்பட்டனர். இதில் பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்.  அதை எதிர்த்து நிதிஷ்குமாரும் லாலு பிரசாத்தும் எப்படிக் கொதித்து எழுந்தார்கள்? மும்பை போவதற்கு விசா வாங்க வேண்டுமா என்று கேட்டார்கள். அவர்களோடு கருணாநிதியை ஒப்பிட முடியுமா? கருணாநிதிக்கு சூடு, சொரணை, மானம், மரியாதை கொஞ்சமும் இல்லாது இருக்கிறதே?  பதவி தோளில் போடும் துண்டு கொள்கை கட்டிக் கொள்ளும் வேட்டி என்றெல்லாம் பேசிய வாயல்லவா கருணாநிதியின் வாய்? இன்று ஏன் அது அடைபட்டுப் போயிற்று?

இந்திரா காந்தியைக் கொன்றவர்களை மாவீரர்களாக்கி சீக்கிய பொற்கோவிலில் படமாகத் தொங்கவிட்டுள்ளார்கள் சீக்கியர்கள். சீக்கிய பொற் கோயிலுக்குப் போகிறவர்கள் அவர்களையும் வணங்கி விட்டுத்தான் போகிறார்கள். அந்தத் துணிச்சல்  கருணாநிதிக்கு உண்டா? அவர் உடலில் ஓடுவது குருதியா? சாக்கடை நீரா?
 
கவிஞர் தாமரை அவர்களே! பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருப்பீர்களே?  அதில் ஒரு காட்சி.
 
சகுனியின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு  சூதாட்டத்தில் தோற்ற தருமன்  தம்பியரைப் பணயம் வைத்து, அவர்களையும் இழந்த பின் தன்னையே பணயமென வைத்து அதிலும் தோற்றுப் போனான்.

"மன்னவர், தம்மை மறந்து போய் – வெறி
வாய்ந்த திருடரை யத்தனர் – அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் – இன்னும்
"செப்புக பந்தயம் வேறொன்றான் – இவன்
தன்னை மறந்தவ னாதலால் – தன்னைத்
தான் பணயமென வைத்தனன் – பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? அந்த
மோசச் சகுனி கெலித்தனன்"

அடுத்து பணயமாகத் தருமன் தன் மனைவி பாஞ்சாலியையே வைக்கத் துணிந்தபோது  அவள் அழகையும் சிறப்பையும் பாரதியார் வர்ணிக்கும் பாங்கே பரவசமூட்டக் கூடியது எனினும் பரிதாபத்திற்குரியதுமாகும்.

"பாவியர் சபைதனிலே – புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் – தவப்பயனை,
ஆவியி லினியவளை – உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவிய நிகர்த்தவளை – அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத் திருவை – எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை,
படிமிசை யிசையுறவே – நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை – ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை – இன்ப
வளத்தினைச் சூதினிற் பணயமென்றே
கொடியவ ரவைக்களத்தில் – அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்"

என் செய்வது? தருமன் தான் முன்பே தடம் மாறி, தன் மனைவியாம் பாஞ்சாலியையும் பணயம் வைத்துப் பகடை உருட்டச் சம்மதித்துவிட்டானே!
இந்தச் செய்தி, பாஞ்சாலிக்குக் கிடைத்தவுடன் அவள் எப்படிச் சினந்தாள்; சீறினாள் என்பதை பாரதியார் பாடுகிற பாங்கு  அந்தப் பெண்ணின் உள்ளத்தில் எத்தகைய பெருந்தீ எழுந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ பாஞ்சாலி பேசியதாகப் பாரதி பேசுகிறார் கேளுங்கள்!

"நாயகர் தாந்தம்மைத் தோற்றபின்-என்னை
நல்கு முரிமை அவர்க்கில்லை – புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின் – என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர் – புவி
தாங்குந் துருபதன் கன்னிநான் – நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் – பின்பு
தார முடைமை யவர்க்குண்டோ!"

கணவன் விலை போய் விட்டான். அவனே விலை போன பிறகு; என்னைப் பந்தயத்தில் பணயம் வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்கிறாள் பாஞ்சாலி!
 பரிதாபத்திற்குரிய பாஞ்சாலி போன்ற ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினாலும் தனக்காகப் போராடக் கூடிய தகுதியுடைவன் தனக்கு முன்பே விலை போய் விட்டானே என்று பாஞ்சாலி குமுறித் துடிப்பதுதான்  பாரதி எழுதிய பாஞ்சாலி சபதப் பாடல் வரிகளிலேயே சூடு பறக்கும் சுவையான வரிகளாகும். சுயமரியாதை உணர்வு கொண்ட ஒரு பெண்ணின் உரிமை முழக்கமும் ஆகும். பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்த போது தருமன், வீமன், அருச்சுனன் என்ன செய்தார்கள்?
 
நெட்மை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
 
பாஞ்சாலியின் சபதம் இது:

தேவி திரெளபதி சொல்வாள்-ஓ
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டும் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் –இது
செய்யுமுன்னே முடியேன் என்று உரைத்தாள்!
 
நாமும் ஒரு சூளுரை எடுத்துக் கொள்வோம்.  தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து அந்த இனத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்ற கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில்
இருந்து அகற்றுவோம். அதுவரை விழி மூடோம்! கண் துஞ்சோம் கருமமே கண்ணாய் இருப்போம். வருகிற தேர்தல் நல்ல வாய்ப்பு. அதனை நழுவ விடுவோமா?
 
நான்கு எதிரிகள் இருக்கும் போது மூன்று எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்து முதலாவது எதிரியை முறியடிப்பதுதான் இராசதந்திரம்.  மூன்று எதிரிகளோடு சேர்ந்து இரண்டாவது எதிரியை
வீழ்த்துவோம். இரண்டு  எதிரிகளோடு  சேர்ந்து மூன்றாவது எதிரியை தோற்கடிப்போம். நான்காவது எதிரியை நாமே தோற்கடிப்போம். தோற்கடிக்க முடியாவிட்டால் நாம் எதற்கும்
தகுதியில்லாதவர்கள்! இது லெனின் சொன்னது.  இதைத்தான் நம்ம பெரியார் சொன்னார். "பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி! அப்புறம் பாம்மை அடி என்று சொன்னார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.  (குறள் 471)

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் இந்தக் குறள்
சீமானுக்குத் தெரியும். அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கைகொடுப்போம். அவரோடு கை சேர்ப்போம். இடித்துரைக்கும் அமைச்சர் போல் செயல்படுவோம்.
 
தோழமையுடன்
 
நக்கீரன்

 

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு,

வணக்கம். 'இனியவளே' படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி 'நாம் தமிழர்' கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் 'நம்பிக்கை நாயக'னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.க வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய 'உண்மையான உள்ள வெளிப்பாடு'!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக 'தமிழீழம் அமைத்துத் தருவேன்' என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் 'சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை' நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய 'இராணுவ'த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

'ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்' என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது 'இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்' என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் 'திடீர்' மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் 'வியூகம்' என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

'அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்' என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, 'அதிர்ந்து'போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, 'தலைசுற்றிப்' போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான 'தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு' ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் 'திராவிட தேசியத்தின்' தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் 'இந்திய தேசியத்'தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. 'எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று 'நாம் தமிழர்' கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.
இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.
மற்றத் தொகுதிகளில் 'திமுக வும் அதிமுக வும் ஒன்றே' என்ற நிலைப்பாட்டை எடுங்கள். '49 ஓ' வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.
இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!

இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!
என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு

உங்கள்
தாமரை
20.01.2011
சென்னை 24

 

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] இந்திய கடலோர காவற்படை எதற்காக?

 
இந்திய கடலோர காவற்படை எதற்காக?
 
தமிழ்நாட்டின் மீனவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரும், தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்துவரும் எவரும் எழுப்பும் வினா இயல்பே.

1983ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்திலிருந்து கோடிக் கரை வரையிலுள்ள மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது - அவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறிலங்க கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன், இரால்களை பறித்துச் செல்வதும், அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதும் 27 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வினா எழுவது இயல்பே.
மேற்கே குஜராத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையும், அங்கிருந்து மேற்கு வங்க மாநிலம் வரை நீண்டுள்ள கிழக்கு கடற்கரையும் சேர்த்து மொத்தம் 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பகுதியை திறமையாக கண்காணிக்க 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவற் படை (Indian Coast Guard - ICG).

இந்தியாவின் கடல் எல்லை என்பது 14 கடல் மைல்களோடு (Territorial Waters) முடிந்துவிடவில்லை. இன்று அது இந்திய கடற்கரையிலிருந்து 300 கி.மீ. தூரம் வரையிலான தனித்த பொருளாதார மண்டலாக (Exclusive Economic Zone) விரிவடைந்துள்ளது. இவ்வளவு விரிவான கடல் பகுதியை காக்கும் வல்லமையுடைய படையாகத்தான் இந்திய கடலோர காவற்படை உள்ளது.

உதாரணத்திற்குக் கூற வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பைக் காக்க 3 கடலோர காவற்படை கப்பல்களும், இந்திய கடற்படையில் ஒரு பெரும் கப்பலும் ஈடுபட்டுள்ளதாக 2005ஆம் ஆண்டு சென்னையை ஒட்டிய கடற்பரப்பில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் கடலோர காவற்படை பயிற்சி செய்து காட்டியபோது அதன் இயக்குனராக இருந்த வைஸ் அட்மிரல் அருண் குமார் சிங் கூறினார். அது மட்டுமல்ல, 4 டார்னியர் விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் பால்க் நீரிணைப் பகுதியை கண்காணிக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது என்றார். இவ்வளவு பலம் வாய்ந்த படை தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பை காப்பதற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது என்றால், இதனைத் தாண்டி எப்படி சிறிலங்க கடற்படையினர் தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று நாங்கள் வினா எழுப்பியபோது அவர் மழுப்பலாகவே பதில் கூறினார்.

பிறகு தனிமையில் என்னோடு பேசியபோது - ஆஃப் த ரெக்கார்ட் என்று கூறிவிட்டு - தமிழக மீனவர்களை தாக்குவது விடுதலைப் புலிகள்தான் என்று கூறினார். அப்படியானால் அதனை ஏன் வெளிப்படையாக கூறவில்லை என்று கேட்டேன். "இல்லை... இல்லை... அது குறித்து விசாரிக்கிறோம" என்று கூறி மழுப்பினார்.
 
 
Muthamizh
Chennai
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] Think-Tank - Srilankan Articles - N Manoharan, Staff - The Centre for Land Warfare Studies (CLAWS) - Institute of Peace and Conflict Studies

 
Think-Tank - Srilankan Articles - N Manoharan, Staff - The Centre for Land Warfare Studies (CLAWS)
 
Institute of Peace and Conflict Studies
 
Sri Lanka: One Year after the War, Where is Ethnic Reconciliation?
 
http://www.ipcs.org/article/south-asia/sri-lanka-one-year-after-the-war-where-is-ethnic-3139.html
More Srilankan Articles
 
 
You may contact Author
 
N Manoharan
Senior Fellow, CLAWS
Email: mailtomanohar@gmail.com
 
Muthamizh
Chennai
 
 
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] தேசிய தலைவரின் தாயர் இன்றைய நிலை !

 
 
தேசிய தலைவரின் தாயர் இன்றைய நிலை !
 
 
 
 
 
 
Muthamizh
Chennai
 

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] மீனவரை காப்பாற்ற கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்க

மீனவரை காப்பாற்ற கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்க

வேதாரண்யத்திலிருந்தமீனபிடிக்கசசென்மேலுமஒரதமிழமீனவரசிறிலங்காவினசிங்கஇனவெறி கடற்படகொடூரமாசித்ரவதசெய்தகொன்றுள்ளது.

இந்ஆண்டபிறந்தஇதஇரண்டாவதமீனவரபடுகொலையாகும். கடந்த 12ஆமதேதிதான், புதுக்கோட்டமாவட்டமஜகதாப்பட்டிணத்தைசசேர்ந்மீனவரவீரபாண்டிய‌ன் (வயது 19) சிறிலங்கடற்படையினராலகச்சததீவகடற்பரப்பிலகொல்லப்பட்டார். சர்வதேசட்டங்களுக்கஎதிராஅந்கொடுஞ்செயலிற்கஎந்நீதியுமஇல்லஎன்றஇந்தியாவினஅயலுறவஅமைச்சரஎஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவிற்காசிறிலங்தூதரபிரசாதகரியவாசத்தஅழைத்தகண்டனமதெரிவித்ததமட்டுமின்றி, அந்தசசம்பவத்திற்கவிளக்கமஅளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மீனவரவீரபாண்டிய‌சுட்டுக் கொல்லப்பட்டதற்குமதங்களுக்குமஎந்தததொடர்புமஇல்லஎன்றசிறிலங்அரசஅறிவித்தது. அந்அறிவிப்பினமீதஇந்திஅரசமேலவிசாரணநடத்முற்படாநிலையில், நேற்றமுனதினமஇரவமேலுமஒரமீனவரசிறிலங்கடற்படையாலபடுகொலசெய்யப்பட்டுள்ளார்.

இதிலவினோதமஎன்னவென்றால், வேதாரண்யமமீனவரஜெயக்குமாரகொல்லப்பட்அன்றகாலைதான், கடலோகாவற்படையினகிழக்குபபிரிவதலைமைபபொறுப்பேற்றுள்சர்மா, தமிழமுதல்வரகருணாநிதியதலைமைசசெயலகத்திலசந்தித்து, இதற்குமேலதமிழமீனவர்களமீததாக்குதலநடத்தப்படாமலபாதுகாப்பளிப்போமஎன்றஉறுதியளித்துவிட்டுசசென்றார். அன்றமாலநாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலுமஅந்தசசெய்தி வந்அதஇரவிலஇந்த‌கொடூரமாபடுகொலையசிறிலங்கடற்படநிகழ்த்தியுள்ளது. இதையுமதங்களகடற்படசெய்யவில்லஎன்றமறுத்துள்ளாரசிறிலங்தூதரபிரசாதகரியவாசம்!

இதஎப்படி நடக்முடியும்? இந்தியாவைபோன்ஒரவல்லரசினமீனவரஒருவரதனதநாட்டினகடற்பரப்பிலமீனபிடித்துககொண்டிருந்தபோது, அண்டநாட்டகடற்படையாலசுட்டுககொல்வதஇன்றநேற்றல்ல, 27 ஆண்டுகளாநடைபெற்றவருகிறதே, எப்படி? இலங்கையைபபோன்ஒரசுண்டைக்காயநாட்டினகடற்படையால் - உருப்படியாஒரகடலோகண்காணிப்பகப்பலகூஇல்லாமலஇருந்அந்நாட்டிற்கு, இந்தியாதானஇரண்டகண்காணிப்பகப்பல்கள'நட்புடன்' அளித்தது. ஆனாலதனதநாட்டநட்பநாடஎன்றகூறுமஒரபெருமநாட்டினமீனவரதுப்பாக்கியாலசுட்டும், சித்ரவதசெய்துமகொல்அந்நாட்டிற்கஎங்கிருந்ததுணிவவருகிறது?

எப்போதெல்லாமஇந்திஅரசவிளக்கமகேட்கிறதோ, அப்போதெல்லாம"எங்களகடற்படசம்பவமநடந்அந்தபபகுதிக்கசெல்லவேயில்லை" என்றசிறிலங்கடற்படகூறும். ஆயினுமஅந்தசசம்பவத்திற்ககாரணமயாரஎன்றவிசாரணநடத்தப்போவதாசிறிலங்அரசுமகூறும். அதைத்தானஇப்போதுமகூறியுள்ளது. இவ்வாறசிறிலங்கடற்படையும், சிறிலங்அரசுமகூறும்போதெல்லாமஅதற்குமேலஒன்றுமசொல்லாமலஇந்திஅரசஅமைதி காக்கும். இதுதானநடந்தவருகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/24/1110124036_1.htm

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ஜெயக்குமார் வீட்டிற்கு செல்கிறார் ஜெ.


இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட
ஜெயக்குமார் வீட்டிற்கு செல்கிறார் ஜெ.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் ஜெயக்குமார்  படுகொலை ‌செய்யப்பட்டார்.

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர் ஜெயக்குமாரின் வீட்டிற்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார்.

இதற்காக அவர் நாளை வேதாரண்‌யம் செல்கிறார்.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47430t


--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெறுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் சேவையை நான் மெச்சுகிறேன்!' - கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்ரியப்


சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெறுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் சேவையை நான் மெச்சுகிறேன்!' - கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்ரியப்

'தமிழ் மக்களாகிய நீங்கள் தாங்கமுடியாத துயரங்களைக் கடந்து கனடா வந்துள்ளதை நான் நன்கறிவேன். இயற்கை எழில் கொண்ட அழகான நாடான சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கனடியத் தமிழர் பேரவை சக்தி வாய்ந்த தலைமைத்துவத்தைக் கொண்ட உறுதியான அமைப்பு. தமிழ் சமூகத்துக்காக சனநாயக ரீதியில் குரல் கொடுத்து வரும் கனடிய தமிழர் பேரவையின் சேவையினை நான் மெச்சுகிறேன்.

சமாதானத்துக்காகக் குரல் கொடுத்து வரும் கனடா எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும்' மார்க்கம் Le Parc Conference & Banquet Centre ரில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற கனடா தமிழர் பேரவையின் நான்காவது ஆண்டு இராப்போசன, தைப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய லிபரல் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான Hon. Michael Ignatieff இவ்வாறு கூறினார்.

'உங்கள் நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அகதிகள் இங்கு வந்த போது அதனை தடுத்து நிறுத்தும் வகையில் கொன்சவேற்றிவ் அரசு புதிய சட்ட மூலம் ஒன்றைக் கொண்டு வந்தது. சபையில் நாம் அதற்கு பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தோம். அரசியல் சாசனத்திலுள்ள உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் நாம் கடுமையாக நிற்போம். அறுவடைப் பெருநாளான பொங்கல் தினத்தைக் கொண்டாடும் தமிழ் மக்களாகிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்றும் Michael Ignatieff கூறினார்.

விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மைக்கல் இக்னாற்ரியவ் அவர்களைக் கனடியத் தமிழர் பேரவையின் தலைர் சிறிரஞ்சன், பேரவையின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் வரவேற்றனர்.

பிரமாண்டமான முறையில் சிறப்பாக நடைபெற்ற இவ்வைபத்தில் ஒன்ராறியோ மாகாண குடிவரவு அமைச்சர் Eric Hoskin அவர்கள் ஒன்ராறியோ மாகாண முதல்வரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.

போக்கு வரத்து அமைச்சர் Kathleen Wynne, சுகாதார ஊக்குவிப்புத் துறை அமைச்சர் Margaret Best, சக்திவளத் துறை அமைச்சர் Brad Duguid, கலாச்சாரம் மற்றும் உல்லாசப் பயணத் துறை அமைச்சர் Michael Chan ஆகியோருட்பட மற்றும் பல துணை அமைச்சர்களும், Green Party தலைவர் Mike Schreiner, மார்க்கம் மேயர் Frank Scarpitti, மாநகர சபை உறுப்பினர் லோகன் கணபதி, யோக் பிரிவு கல்விச் சபையின் உறுப்பினர் வனிதா நாதன், பிரபல சட்டத்தரணிகளான Barbara Jackman, மெலனி டேவிட், ஹரி ஆனந்தசங்கரி, நாதன் சிறிதரன், தம்மையா ஸ்ரீபதி, Sharry Aiken, ரொறண்டோ பல்கலைக் கழகப் பேராசிரியர்களான Francis Cody, பேராசிரியர் யோசெப் சந்திரகாந்தன், மற்றும் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தி, கனடா புற்று நோய் சபையின் இயக்குநர் Guy Laporte, கனடா தமிழ் மருத்துவர், பல்மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் வடிவேல் சாந்தகுமார், உபதலைவர் டாக்டர் ராஜேஸ் லோகன், தமிழ் விஞ்ஞானிகள் டாக்டர் நடேஸ் பழனியப்பன், டாக்டர் கஜானா சட்குணானந்தராஜா, தமிழ் சட்டத்தரணிகள், சட்டக் கல்லூரி தமிழ் மாணவர்கள், தமிழ்ப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோருட்பட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டனர்.

சாருஜன் கணபதிப்பிள்ளை விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். செல்விகள் மெலனி ரட்ணம், உமா ராஜேந்திரன் ஆகியோர் முறையே கனடா தேசிய கீதத்தினையும், தமிழ்த் தாய் வாழ்த்துக்களையும் பாடினார்கள்.

கனடியத் தமிழர் பேரவையை உருவாக்குவதில் பங்கு வகித்தவர்களில் ஒருவரும் மூத்த உறுப்பினருமான திரு. S. செல்வராஜா அவர்கள் குத்து விளக்கினை ஏற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தார்.

மார்க்கம் மாநகர சபை மேயர் Frank Scarpitti உரையாற்றுகையில,

மார்க்கம் நகரில் நடைபெறும் இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள வருகை தந்துள்ள Michael Ignatieff, ஏனைய அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். மார்க்கம் தொகுதியில் அதிகளவிலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். கனடாவினதும், மார்க்கத்தினதும் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ள தமிழ் சமூகத்தினருக்கு மாநகர சபையைச் சேர்ந்த நாம் ஒவ்வொருவரும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொளள்கின்றோம்.

மார்க்கம் மாநகர சபை குடிவரவாளர்களது நகரமாகும். கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் தமிழினத்தவர்கள் கனடாவின் பிரதான சமூகத்துடன் ஒன்றிணைந்து விட்டார்கள். தமிழ் தந்தை ஒருவர் மார்க்கத்தில் இருப்பது எனது சொந்த ஊரில் இருப்பதைப் போன்று இருக்கிறது எனக் கூறினார். அதைக் கேட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

கடந்த சில வருடங்களில் சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட்டன. அப்பொழுதெல்லாம் நாங்கள். இங்குள்ள தமிழ் மக்களுக்கு துணையாக நின்றோம். தமிழ் சமூகத்தினரான நீங்கள் நடை பவனி மூலம் 35 ஆயிரம் டொலர்களைத் திரட்டி புற்று நோய் சபைக்கு வழங்கியுள்ளீர்கள். அதிகளவில் இரத்ததானம் செய்துள்ளீர்கள். அதையிட்டு நாம் பெருமை அடைகின்றோம்' என்றார்.

NDP கட்சியின் சார்பாக ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர் Michael Prue உரையாற்றினார்.

கனடியத் தமிழ்ர் பேரவையின் தலைவரும், வினிபெக் பல்கலைக் கழகப் பேராசிரியருமான கலாநிதி ஸ்ரீரஞ்சன் உரையாற்றுகையில், 'சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து கடந்த 63 ஆண்டு காலமாக தமிழினத்தைப் பொறுத்த வரையில் எதுவித மாற்றமுமே ஏற்படவில்லை. அங்கு எவ்வாறு மனித உரிமை மீறல் செயல்கள் இடம் பெற்று வருகின்றன என்பதற்கான ஆதாரங்களை லண்டனிலுள்ள 'சனல்-4' தொலைக் காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.

எமது சுதந்திரப் போராட்டத்தின் போது பல்லாயிரக் கணக்கான உயிர்களை நாம் பறிகொடுத்துள்ளோம். ஆனால் நாம் சளைத்து விடவில்லை. எமது தாய் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனைவருடனும் ஒன்றிணைந்து இன்னும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தென்சூடான் நாடு அண்மையில் அதன் சுதந்திரத்துக்காய் வாக்களித்துள்ளது. அவர்களுக்கு கிடைத்தது போன்றதொரு வாய்ப்பு ஈழத்தமிழருக்கும் விரைவில் கிடைக்க வேண்டும். கனடா மனித உரிமையை மதிக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் Michael Ignatieff உம் மனித உரிமைக்கு ஆதரவளித்து வருகின்றார்' என்றார்.

கனடா தமிழர் பேரவையினால் நிதி சேர் நடை மூலம் திரட்டப்பட்ட 36 ஆயிரம் டொலர்களுக்கான காசோலையை சட்டத்தரணி மெலனி டேவிட் புற்று நோய் சபையின் இயக்குனர் Guy Laporte த்திடம் கையளித்தார்.

பரதநாட்டிய ஆசிரியை நிரோதினி பரராஜசிங்கத்தின் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன. சிறந்த சமூக சேவை ஆற்றியமைக்கான சட்டத்தரணி Barbara Jackman, ஓய்வு பெற்ற யோர்க் பிராந்திய முன்னாள் காவல்துறைத் தலைமை அதிகாரி Armand LaBarge ஆகியோர் கனடா தமிழர் பேரவையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இராப் போசன விருந்தைத் தொடர்ந்து கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி சுமுதினி சத்தி அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவெய்தியது.

http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34es29302jQgdd2Qjb20F922e4ILLcb3pGY2



--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] இலங்கை அகதிகள் படத்தை (“செங்கடல்”) தடை செய்வதா? தணிக்கை குழுவுக்கு பெண் இயக்குனர் கண்டனம்

சிங்கள அரசு கொடுமைகளில் தப்பி தமிழகம் வரும் ஈழத்தமிழர்ளை மையப்படுத்தி "செங்கடல்" என்ற பெயரில் படம் தயாராகியுள்ளது. தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் நிலைமை தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுதல், கடலோர மீனவர்கள் கொதிப்பு போன்றவை காட்சியாக்கப்பட்டு உள்ளன.
 
லீனா மணிமேகலை இந்த படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை குழு செங்கடல் படத்துக்கு அனுமதி மறுத்து ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது.
 
இதுகுறித்து லீனா மணி மேகலை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
 
செங்கடல் படத்தில் இலங்கை தமிழ் அகதிகள் மற்றும் மீனவர்கள் அவல நிலையை பதிவு செய்துள்ளோம். இது மக்கள் சினிமா அவர்களின் விமர் சனங்களை அப்படியே படமாக்கியுள்ளோம். இந்த படத்தை தடை செய்ய முயற்சிக்கின்றனர்.
 
டி.வி. சேனல்களில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அப்படியே வருகிறது. ஆபாச படங்களையும் இண்டர்நெட்டை திறந்தால் எது வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் படங்களில் உண்மை தன்மைகள் இருக்கக்கூடாது என்கின்றனர்.
 
மக்களின் யதார்த்தங்களை படமாக்குவதை தடுக்கின்றனர். சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் ஒரு உயிர் போனால் நாடே கொந்தளிக்கிறது. தமிழக மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப்படுவதை பார்த்து சொரணை இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
 
ஒரு படைப்பாளி என்ற முறையில் அதை படமாக்குவது தவறா? தணிக்கை குழு முடிவை எதிர்த்து டெல்லி டிரிபியூனல் கோர்ட்டுக்கு போய் உள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க ஜனநாயகத்தின் கடைசி கதவு வரை தட்டுவோம்.
 
இவ்வாறு லீனா மணி மேகலை கூறினார்.

http://www.maalaimalar.com/2011/01/25124431/ban-to-srilanka-refugees-cinem.html

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

Sunday, January 23, 2011

[கனடா தமிழ் Canada Tamil] Re: [தமிழ் மன்றம்] தமிழக மீனவர் ஜெயக்குமார் சுட்டுப் படுகொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்



இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: கலைஞர்


இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் (வயது 28 த/பெ. நாகப்பன்) மற்றும் இருவர், 22 1 2011 காலை ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.


22.01.2011 இரவு 11 00 மணியளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை இடைமறித்துத் தாக்கியதில் ஜெயக்குமார் இறந்து விட்டதாகவும், மற்றும் இருவர் தாக்குதலில் இருந்து தப்பித்து கரை சேர்ந்திருப்பதாகவும் தெரிகிறது. 


இதனை அறிந்த முதல்வர் கருணாநிதி இன்று (23 1 2011) தன்னைச் சந்தித்த மத்திய நிதித் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம்   இச்சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டதுடன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, இது தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென்றும், இத்தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு இலங்கை அரசினை வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.


இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது குடும்பத்தாருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




2011/1/23 T BHARATHI <sanbharas@gmail.com>





தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் உடனிருந்தனர்.


இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


நாம் இலங்கை அரசோடு நல்ல நட்புறவு கொண்டுள்ளோம். நாம் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் வேளையில் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவதை நாம் நியாயப்படுத்த முடியாது.

மீனவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இம்மாதிரியான சுட்டுக் கொல்லும் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுடன் பேசி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என்றார்.




2011/1/23 Muthamizh Vendhan <muthamil78@gmail.com>


நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.


நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஜெயக்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதினார். இதையடுத்து இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது


இந்திய அரசின் கண்டனத்திற்கு பிறகும், ராமேஸ்வரம் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.


தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, சனிக்கிழமை (22.01.2011) கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47278

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.


--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

[கனடா தமிழ் Canada Tamil] Re: [தமிழ் மன்றம்] தமிழக மீனவர் ஜெயக்குமார் சுட்டுப் படுகொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்






தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் உடனிருந்தனர்.


இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


நாம் இலங்கை அரசோடு நல்ல நட்புறவு கொண்டுள்ளோம். நாம் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் வேளையில் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவதை நாம் நியாயப்படுத்த முடியாது.

மீனவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இம்மாதிரியான சுட்டுக் கொல்லும் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுடன் பேசி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என்றார்.




2011/1/23 Muthamizh Vendhan <muthamil78@gmail.com>

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.


நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஜெயக்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதினார். இதையடுத்து இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது


இந்திய அரசின் கண்டனத்திற்கு பிறகும், ராமேஸ்வரம் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.


தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, சனிக்கிழமை (22.01.2011) கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47278

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

Friday, January 14, 2011

[கனடா தமிழ் Canada Tamil] கலக்கத்தில் காங்கிரஸ்...வைகோ தயாரித்த ரகசிய சிடி “ஈழத்தின் இனக்கொலை இதயத்தின் ரத்தம்”

வைகோ தயாரித்த ரகசிய சிடி "ஈழத்தின் இனக்கொலை இதயத்தின் ரத்தம்" என்ற தலைப்பில், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க.,பொதுச்செயலர் வைகோ, தனது கைப்பட வசனம் எழுதி, டைரக்ட் செய்த, சிடிக்களை, தாயகத்தில் ரகசியமாக வெளியிட்டார்.

இந்த "சீடி'க்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட "சீடி'யில் மத்திய, மாநில அரசை கடுமையாக தாக்கி வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10ம் தேதி ம.தி.மு.க., தலைமை அலுவலகமான தாயகத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் தலைவர்கள் சிலர் ரகசியமாக வந்தனர். அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்ற தகவலை வைகோ கடைசி நிமிடம் வரை தெரிவிக்கவில்லை. அனைவரையும் கட்சி அலுவலகத்தில் உள்ள மாடி அறைக்கு வைகோ அழைத்துச் சென்றார்.

அந்த அறைக்குள் இருந்த அனைத்து விளக்குகளும் திடீரென அணைக்கப்பட்டன. பெரிய "டிவி'யில் "சீடி' ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த "சீடி'யை அனைவரும் அமைதியாக பார்த்தனர். அரை மணி நேரம் அந்த "சீடி' காட்சி ஒளிபரப்பான பின், விளக்குகள் எரிய வைக்கப்பட்டன. "சீடி'யை பார்த்த வைகோ உள்ளிட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. வீட்டிற்கு புறப்பட்ட அவர்களிடம், தனித்தனியாக "சீடி'க்களை வைகோ வழங்கினார்.

"சீடி'யில் இடம் பெற்ற காட்சிகள் குறித்து ம.தி.மு.க., பிரமுகர் கூறியதாவது: "ஈழத்தின் இனகொலை இதயத்தின் ரத்தம்' என்ற தலைப்பில் வைகோ "சீடி' தயாரித்துள்ளார். இந்த "சீடி'யில் உரையாக்கம், இயக்கம், வெளியீடு என வைகோவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபண்டார நாயக்கா, சாஸ்திரி ஒப்பந்தத்தில், பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை அகற்றப்பட்ட சம்பவம் முதல் இலங்கைத் தமிழர்களின் ஆதரவு "டிவி'யில் பணிபுரிந்து வந்த இசைபிரியாவை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த காட்சிகள் வரை இடம் பெற்றுள்ளன.

இலங்கை ராணுவம் குண்டு வீசியதில், செஞ்சோலையில் குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது, கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருந்து சிசுக்களை வெளியே அகற்றுவது, இந்திய ராணுவம், சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்வது போன்ற காட்சிகளும், இலங்கை தமிழர்களுக்காக ஜெனீவா நாட்டில் வைகோ உரையாற்றியதும், இலங்கை போரில் கெமிக்கல் குண்டுகள் வீசிய காட்சிகளும் உள்ளன.

லண்டனுக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து வீதியில் போராட்டம் நடத்த வேண்டும் என, லண்டன் தமிழ் வானொலியில் வைகோ நேரலையில் பேசியபோது, அவரது ஆவேச உரையை கேட்டு லண்டன் வாழ் தமிழர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியே வந்து போராட்ட களத்தில் குதித்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் சண்டையிடுவது போன்ற காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் மறைமுகமாக உதவி செய்ததையும், முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக தாக்கும் வசனங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த "சீடி'யினால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற காரணத்திற்காக தான், வைகோவே அதற்கான பொறுப்புகளை ஏற்று "சிடி'யை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியதாவது: இந்திய மண்ணில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ரகசியமாக, "சீடி' வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

யோகேஸ்வரன், முகுந்தன், ஸ்ரீசபாரத்தினம், பத்மநாபன் போன்றவர்களை கொன்று குவித்தவர்கள் விடுதலைப் புலிகள். இலங்கைத் தமிழர்களின் உரிமையை பெற்றுத்தர போராடிய ராஜிவை கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தேச துரோகம். உடனடியாக இந்த "சிடி'க்களை பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ கோரிக்கை : உலகமெல்லாம் வாழும் தமிழ் சொந்தங்களே உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்குறுந்தகட்டினை பதிவு எடுத்து தமிழர் இல்லந்தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள் அதுவே நம் இனத்திற்கு நாம் ஆற்றும் தலையாய கடமையாகும்.

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.